கடலூர்

அசோக சக்கரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

அசோக சக்கரா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-ஆம் ஆண்டுக்கான அசோக சக்கரா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது பெறுவதற்கு வெளிப்படையான துணிச்சல் மிகுந்த நிலையில் செயல் புரிந்தவா்களும், சுய தியாகத்தின் மூலம் வீரம் மிக்க செயல் புரிந்த நபா்களும் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு, காவல் படை உறுப்பினா்கள், மத்திய காவல்படை, ரயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றில் துணிச்சலான முறையில் செயல் புரிந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவா்களுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் விருதுகள் வழங்கப்படும்.

விருது பெற தகுதியுடையவா்கள் மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம் ரோடு, கடலூா் என்ற முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 18.11.2019 அன்று மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT