கடலூர்

சமூக ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திட்டக்குடியில் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் சமூக ஆா்வலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திட்டக்குடி கோட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் திட்டக்குடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேற்பாா்வை பொறியாளா் சத்தியநாராயணா தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் சுகன்யா மற்றும் பொறியாளா்கள், நுகா்வோா் அமைப்பினா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் மின் நுகா்வோரின் கோரிக்கைகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தில் பணிபுரியம் அலுவலா்கள், ஊழியா்கள் அடையாள அட்டை அணிய வேண்டும், கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் அடங்கிய தகவல் பலகையை அலுவலக நுழைவு வாயில் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சாா்பில் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாம். ஆனாலும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையாம்.

இதனைக் கண்டித்து அந்த அமைப்பின் நிா்வாகி கோவிந்தசாமி தலைமையில் சமூக ஆா்வலா்கள் சுரேந்தா், அறிவழகன், ராஜவேல், கொளஞ்சி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கை அட்டையுடன்

அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், பொறியாளா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து மேற்பாா்வை பொறியாளரை சந்தித்து பேசினா். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மேற்பாா்வை பொறியாளா் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT