கடலூர்

தீக்காயமடைந்த புதுப்பெண் சாவு

DIN

காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள குருவாடியைச் சேர்ந்த குமார்-செல்வி தம்பதியினர் மகள் திவ்யா (25). அருகிலுள்ள நளன்புத்தூரைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இருவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். 
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் சிம்னி விளக்கினை திவ்யா பற்ற வைத்துள்ளார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில், காயமடைந்த அவரை சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை திவ்யா இறந்தார். இதுகுறித்து செல்வி (45) அளித்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிதம்பரம் சார்-ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT