பண்ருட்டி அருகே 1,200 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கியதாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி வட்டம், அழகுபெருமாள்குப்பம் காலனி பகுதியில் புதுப்பேட்டை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடத்திவந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தமிழரசி (55), மகிமைதாஸ் (20), பூவராகவன் (55) ஆகியோரை கைது செய்தனர்.