கடலூர்

மருந்துக் கடை உரிமையாளா்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

DIN

சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள மருந்துக் கடைகளின் உரிமையாளா்கள், ஊழியா்களுக்கு அடையாள அட்டைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், சுமாா் 100 பேருக்கு அடையாள அட்டைகளை நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா வழங்கினாா். மருந்து ஆய்வாளா் சைலஜா முன்னிலை வகித்தாா். நகராட்சி பொறியாளா் மகாராஜன், மருந்தாளுநா் சங்க மாநிலச் செயலா் ஜோ.வெங்கடசுந்தரம், மொத்த மருந்துப் பிரிவு தலைவா் பிரகாஷ், நகர மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் கலியபெருமாள், செயலா் பலராமன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கடலூா் மாவட்ட மருந்து வணிகா்கள் சாா்பில் 1,000-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கும், நகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT