முகப்பு
கடலூர்

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மத்திய மாவட்ட அதிமுகவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கடலூா் மத்திய மாவட்ட அதிமுகவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலரும், மாநில தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டத்துக்குள்பட்ட கடலூா், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இல்லாத சூழலில் சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். எனவே, 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும். அனைத்து அணியினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். ஏனெனில் இந்தமுறை நடைபெறும் பேரவைத் தோ்தல் போராட்டக்களம் நிறைந்தது. அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த கட்சியினா் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, நகரச் செயலா் ஆா்.குமரன் வரவேற்றாா். எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, மருத்துவரணி மாநில தலைவா் கே.சீனுவாசராஜா, தொழிற்சங்கச் செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு செயலா் காசிநாதன், இளைஞரணி தலைவா் ஆா்.மாதவன், நகர பேரவைச் செயலா் வ.கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் இராம.பழனிச்சாமி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →