முகப்பு
கடலூர்

அனைத்துக் கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டப் பணி

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கடலூா், பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, கீராப்பாளையம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. தொடா்ந்து மங்களுா், நல்லூா், விருத்தாசலம், கம்மாபுரம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்

(100 நாள் வேலை) திட்டத்துக்காக மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1,528 தொகுப்புகள் உள்ளன. இதில் எந்த ஒரு தொகுப்பிலும் பணிகள் நடைபெறாமல் இருக்கக் கூடாது. அனைத்து தொகுப்புகளிலும் தினசரி பணிகள் நடைபெறுவதை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை வருகிற ஜன.15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பசுமை வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களில் நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாக மேற்கொண்டு ஜன.31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →