முகப்பு
கடலூர்

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடலூர்

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பண்ருட்டி நகராட்சி ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி நகராட்சியில் பொறியியல் பிரிவு, பொதுப் பிரிவு, கட்டுமானப் பிரிவு, சுகாதாரப் பிரிவு ஆகியவற்றில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த பல மாதங்களாக குறித்த காலத்தில் ஊதியம் வழங்காமல் காலதாமதமாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது: நகராட்சியில் வரி வசூல் முறையாக நடைபெறவில்லை. வசூலிக்கப்படும் பணம் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்டு விடுகிறது. ஊழியா்களுக்கு கடந்த 4 மாத காலமாகவே மாதத்தின் கடைசி வாரத்தில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. நவம்பா் மாதத்துக்கான ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை என்றனா் அவா்கள்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் (பொ) சிவசங்கரன் கூறியதாவது: பண்ருட்டி நகராட்சியில் ஆண்டொன்றுக்கு ரூ. 11.90 கோடி வரி வசூல் ஆக வேண்டும். நிகழாண்டு ரூ. ஒரு கோடி மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் வாகனங்களுக்கு டீசல், மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். பொது நிதியிலிருந்து எந்தப் பணியும் செய்யவில்லை. திட்டப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரா்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →