முகப்பு
கடலூர்

புதை சாக்கடை கழிவை அகற்றும் ‘ரோபோ’

கடலூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவை அகற்ற ‘ரோபோ’ இயந்திரம் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கடலூரில் புதை சாக்கடை கழிவுகளை அகற்றும் ரோபோ இயந்திரத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட மாநில அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவை அகற்ற ‘ரோபோ’ இயந்திரம் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பிலான இந்த ரோபோவை வழங்கியது. இந்த இயந்திரத்தை பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி கடலூரில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பங்கேற்று, ரோபோவை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

இந்த இயந்திரம் மூலம் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை மாறும். ஆள்நுழைவு குழிகளில் அடைப்பை சரிசெய்யும்போது ஏற்படும் மனித உயிரிழப்புகளும் தடுக்கப்படும் என்றாா்.

இந்த ரோபோவை திருவனந்தபுரத்தைச் சோ்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் விஷ வாயு கண்டறிதல், கேமரா உள்ளிட்ட வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ பக்கிரி, ஓஎன்ஜிசி பொது மேலாளா்கள் சி.ஐ.செபாஸ்டின், டி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கடலூா் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →