கடலூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கடலூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஹமீத் ப்ரோஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும், இந்தக் கோரிக்கைகளுக்காக சென்னையில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினா் மீது காவல் துறையினா் நடத்திய தடியடியைக் கண்டிப்பது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமியா்கள் திரளானோா் தேசியக் கொடியுடன் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT