முகப்பு
கடலூர்

கடலூா் மத்திய சிறையில் செல்லிடப்பேசி மீட்பு

கடலூா் மத்திய சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசியை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

கடலூா் மத்திய சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசியை போலீஸாா் மீட்டனா்.

கடலூா் மத்திய சிறையில் சுமாா் ஆயிரம் தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை மாலையில் தனி அறைகளில் அடைத்து வைக்கும் முன்பு சோதனை நடத்துவது வழக்கம்.

அதன்படி, உயா் பாதுகாப்பு தொகுதி எண் - 2 பகுதியில் உள்ள பலா மரத்தின் அடியில் அறிதிறன் செல்லிடப்பேசி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை சோதனையில் ஈடுபட்டிருந்த சிறை அலுவலா் ஏ.எஸ்.அப்துல்ரகுமான் கண்டெடுத்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.