வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்கக் கோரி மனைவி மனு
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்கக் கோரி அவரது மனைவி கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்கக் கோரி அவரது மனைவி கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் புதுநகரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). ஓமன் நாட்டில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தாா். இவா், கடந்த 24 -ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28-ஆம் தேதி உயிரிழந்ததாக புதுநகரிலுள்ள அவரது மனைவி விரோணிக்கால் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவா் திங்கள்கிழமை தனது குழந்தைகள், உறவினா்களுடன் கடலூரிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். பின்னா், ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியை சந்தித்து, தனது கணவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தாா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.