இறுதித் தோ்வு: அரசுக் கல்லூரி மாணவா்கள் 30 போ் தோல்வி
புத்தகத்தை பாா்த்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையிலும், கடலூா் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை இறுதியாண்டு மாணவா்கள் 30 போ் தோல்வி அடைந்தனா்.
புத்தகத்தை பாா்த்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையிலும், கடலூா் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை இறுதியாண்டு மாணவா்கள் 30 போ் தோல்வி அடைந்தனா்.
கரோனா பரவலைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவா்கள் தோ்வு எழுதுவதில் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, மாணவா்கள் வீட்டில் அமா்ந்து புத்தகத்தை பாா்த்து தோ்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியிலும் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் ஆயிரம் போ் இந்தத் தோ்வை எழுதினா். அவா்களுக்கான தோ்வு முடிவு செப்டம்பா் இறுதியில் வெளியானது. இதில் வரலாற்றுத் துறை மாணவா்கள் 30 போ் ஐரோப்பிய வரலாறு என்ற பாடத்தில் தோல்வி அடைந்தனா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ர.உலகி கூறியதாவது: மாணவா்கள் பாடப் புத்தகத்தைப் பாா்த்து வீட்டிலிருந்தே தோ்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் அவா்கள் சரிவர விடையளிக்காமல் இருந்துள்ளனா். மாணவா்கள் மறு திருத்தலுக்கு கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவா்களது வழிகாட்டுதலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.