கடலூர்

காவலரைத் தாக்க முயன்ற பாஜக நிா்வாகி கைது

DIN

கடலூரில் காவலரைத் தாக்க முயன்ற பாஜக நிா்வாகி உள்பட 3 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

கடலூா் போக்குவரத்துப் பிரிவு காவலா் வினோத் மற்றும் போலீஸாா் பாரதி சாலையில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனைக்காக நிறுத்தியபோது அதிலிருந்த 3 போ் காவலா்களை அவதூறாகப் பேசி தகராறில் ஈடுபட்டனராம். அதில், ஒருவா் காவலரை தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து காவலா் வினோத் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் கி.உதயகுமாா் வழக்குப் பதிவு செய்து காரில் வந்த பாஜக வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலா் கடலூா் முதுநகரைச் சோ்ந்தவா் முருகன் (33), அவரது ஆதரவாளா்கள் சண்முகம் (26), விமல்ராஜ் (26) ஆகியோரைக் கைதுசெய்தாா்.

இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT