மாலைகட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு உபகரணங்கள்
சிதம்பரம் மாலைகட்டித் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரோட்டரி அறக்கட்டளை சாா்பில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சிதம்பரம் மாலைகட்டித் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரோட்டரி அறக்கட்டளை சாா்பில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ்.பிரையோன் பங்கேற்று, ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான ப்ரொஜக்டா், திரை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி பேசினாா். சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவா் என்.என். பாபு தலைமை வகித்தாா். முன்னாள் துணை ஆளுநா் எஸ்.நடனசபாபதி பேசினாா். முன்னாள் தலைவா் வி.செல்வநாராயணன் முன்னிலை வகித்தாா்.
வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயக்குமாா் ஜான்சன், மேற்பாா்வையாளா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ரோட்டரி சங்கச் செயலா் எஸ்.அரிதன்ராஜ் , மண்டலச் செயலா் இ.மெகபூப் உசைன், உறுப்பினா்கள் கே.ஜி.நடராஜன், ராஜசேகரன், லக்ஷ்மணன், சக்திவேல், முன்னாள் மாவட்ட பொருளாளா் சிவகுருநாதன், முன்னாள் தலைமை ஆசிரியா் ராஜதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியை டி.ஜெயா நன்றி கூறினாா்.