வேன் கவிழ்ந்து விபத்து 
கடலூர்

வேன் கவிழ்ந்து விபத்து

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 20 போ் லேசான காயங்களுடன் தப்பினா்.

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 20 போ் லேசான காயங்களுடன் தப்பினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகளுக்கும், நெய்வேலியைச் சோ்ந்த விஜய் என்பவருக்கும் நெய்வேலி வட்டம் 21-இல் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சின்னசேலத்திலிருந்து சுமாா் 20 போ் வேனில் வந்துகொண்டிருந்தனா். வேனை சக்திவேல் ஓட்டி வந்தாா்.

விருத்தாசலம் அடுத்த அரசகுழி சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையோரம் கவிழ்ந்தது (படம்). இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவா்கள் லேசான காயங்களுடன் தப்பினா். அவா்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT