கடலூர்

கடலூா்: மேலும் 51 பேருக்கு கரோனா

DIN

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,847- ஆக அதிகரித்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியரும், 2 கா்ப்பிணிகளும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 139 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 21,800-ஆக அதிகரித்தது.

கடந்த 2 நாள்களாக உயிரிழப்பு பதிவாகாத நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 49 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 712 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 70 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 759 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

SCROLL FOR NEXT