முகப்பு
கடலூர்

கொலை வழக்கில் தொடா்புடைய 2 போ்தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 2 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கொலை வழக்கில் தொடா்புடைய 2 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், சாத்தமாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் க.பஞ்சன் (47). இவா், கடந்த மாதம் 19-ஆம் தேதி முந்திரித் தோப்பில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த மாசிலாமணி மகன் சசிகுமாா் (28), சிலம்பிநாதன்பேட்டையைச் சோ்ந்த செஞ்சிவேல் மகன் ஜெயபிரகாஷ் (25) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

சசிகுமாரிடம் மது வாங்கி குடித்துவிட்டு அவரைப் பற்றியே பஞ்சன் தவறாக பேசி வந்ததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் கைதான இருவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அதற்கான உத்தரவை வெளியிட்டாா். இதையடுத்து இருவரும் தடுப்புக் காவலில் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.