சிதம்பரம்: நீதிமன்ற ஆணை மீறி நூறு சதவீத கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் மெட்ரிக் பள்ளிகள் சார்பான புகார்களை அளிப்பதற்கான புதிய மின்னஞ்சல் முகவரியை தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் தெரிவித்துள்ளபடி நூறு சதவீத கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பாக பெறப்படும் புகார்களை பதிவு செய்து உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு பள்ளிகள் சார்பாக புகார்களை பெறுவதற்கு cuddaloreceo@gmail.com என்ற பிரத்தியேகமாக ஒரு மின்னஞ்சல் முதவரி தொடங்கப்பட்டுள்ளது.
எனவே ஏதேனும் கல்விக் கட்டணம் சார்ந்த புகார்கள் இருப்பின், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அதனை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.