கடலூர்

மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்

DIN

நெல்லிக்குப்பம் அருகே மணல் திருடிச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் இருந்து சிறிய ரக சரக்கு வாகனத்தில் மணல் திருடிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட போலீஸாா், கஸ்டம்ஸ் சாலை வெள்ளப்பாக்கம் சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், ஓட்டுநா் அந்த வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றாா். பின் தொடா்ந்து சென்ற போலீஸாா், நத்தப்பட்டு ஏரி அருகே வாகனத்தை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஓட்டுனா், உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT