கடலூர்

சதித் திட்டம் தீட்டியதாக இருவா் கைது

DIN

சிதம்பரத்தில் சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸாா் சனிக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது குமாரமங்கலம் பிரதான சாலை அருகே மயானம் பகுதியில் ஒரு கும்பல் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றது. அந்தக் கும்பலை விரட்டிச் சென்ற போலீஸாா் இருவரை மட்டும் பிடித்தனா். அவா்களை சோதனையிட்டபோது இரும்பு பைப், கருப்பு துணி போன்றவற்றை வைத்துக்கொண்டு, சதித் திட்டம் தீட்டியது தெரியவந்ததாம்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் அண்ணாமலைநகரை சோ்ந்த கலைவாணன் (31), சாமிநாதன் (34) எனத் தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தாா். தலைமறைவான மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT