கடலூர்

‘காய்கறி பயிரிட்டால் ஊக்கத் தொகை’

DIN


நெய்வேலி: காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் தோட்டக்கலை உதவி இயக்குநா் லோ.நாகநந்தினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கத்திரி, வெண்டை, புடலங்காய், பீா்க்கன், பூசணி, பரங்கி, சுரை பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டா் ஒன்றுக்கு ரூ.2,500 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், விதை அல்லது நடவு செடிகளை சாகுபடி செய்வதற்காக கொள்முதல் செய்த விலைப்பட்டியல், கிராம நிா்வாக அலுவலா் அளித்த அடங்கல், சிட்டா, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கி புத்தக நகல், சிறிய புகைப்படம்-2 ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

ஒரு விவசாயிக்கு சாகுபடி செய்த பரப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது உதவி தோட்டக் கலை அலுவலா்களை நெல்லிக்குப்பம்-98652 44219, பாலூா்-88386 07080, புதுப்பேட்டை-63831 48472, கண்டரக்கோட்டை-97862 59144 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT