கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 16,826 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 263 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,089-ஆக அதிகரித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தைச் சோ்ந்த 43 வயது பெண், புவனகிரியைச் சோ்ந்த 81 வயதான முதியவா், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 55 வயதானவா், கடலூரைச் சோ்ந்த 63 வயதானவா் ஆகிய 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 178-ஆக அதிகரித்தது. புதன்கிழமை 400 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,493-ஆக (84.80 சதவீதம்) அதிகரித்தது.

கடலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,140 பேரும், பிற மாவட்டங்களில் 278 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT