நெய்வேலி அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெரிய கண்ணாடி கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அன்புராஜ் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி கடந்த 3 மாதங்களாக தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அன்புராஜை கைது செய்தனா்.