முகப்பு
கடலூர்

காவல் உதவி ஆய்வாளருக்கு கத்தி வெட்டி: இளைஞா் கைது

புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 12:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சிவகுருநாதன். இவரும், காவலா்களும் வெள்ளிக்கிழமை சீனிவாசபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதனின் இடது பக்க கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றாா்.

Advertisement

அருகிலிருந்த சக காவலா்கள் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியைச் சோ்ந்த நிரபு (31) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த இளைஞா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.