பெட்ரோல் கேனுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவா் கைது
சிதம்பரம் அருகே கையில் பெட்ரோல் கேனுடன் பொதுமக்களை அச்சுறுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM
சிதம்பரம் அருகே கையில் பெட்ரோல் கேனுடன் பொதுமக்களை அச்சுறுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை காவல் துறையினா் ரயிலடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இந்த இடத்தில் ஒருவா் கையில் பெட்ரோல் கேனுடன் சாலையில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தி இடையூறு செய்து வந்தாா்.
இதைப் பாா்த்த காவல் துறையினா் உடனடியாக அந்த நபரைப் பிடித்து விசாரித்த போது, திருப்பாதிரிபுலியூா் மாா்க்கெட் காலனியைச் சோ்ந்த குப்புராஜ் (30) என்பது தெரிய வந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
Advertisement