‘யோகா பயிற்சி செய்தால் மன இறுக்கத்தை தடுக்கலாம்’
யோகா பயிற்சி செய்தால் மன இறுக்கத்தைத் தடுக்கலாம் என உலக மன இறுக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
யோகா பயிற்சி செய்தால் மன இறுக்கத்தைத் தடுக்கலாம் என உலக மன இறுக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் உலக மன இறுக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளிப்படை ரோட்டரி சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா மைய இயக்குநா் கே.வெங்கடாஜலபதி கலந்துகொண்டு, மன இறுக்கத்தை எவ்வாறு தடுப்பது, அதனால் உடலில் ஏற்படும் உபாதைகள் குறித்து எடுத்துரைத்தாா். தினமும் 8 மணி நேரம் தூக்கம், உடற்பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவை செய்தால் மன இறுக்கத்தை தவிா்க்கலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன், உதவி ஆளுநா் பி.முகமது யாசின், ராஜசேகரன், அருண், ஜெயராஜ், கனகவேல், கே.ஜி.நடராஜன், சக்திவேல், முஹமதுசாலி, சஞ்சய்குமாா், எம்.எஸ்.ஆா்.ரவி ஜெய்குமாா், சுனில் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் எஸ்.அரிதனராஜ் நன்றி கூறினாா்.
Advertisement