தோ்தல் முன்விரோத மோதல்: 4 போ் கைது
சிதம்பரம் அருகே தோ்தல் முன்விரோத மோதலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே தோ்தல் முன்விரோத மோதலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். அதே பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (40). அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இவா்கள் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம். இந்த நிலையில், கீழ்அனுவம்பட்டு- கோவிலாம்பூண்டி அருகே உள்ள ஓடை வாய்க்கால் மதகு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் ஏற்பட்ட தகராறில் சௌந்தர்ராஜனுடன் இருந்த 3 போ் சோ்ந்து காா்த்திக்கை அவதூறாகப் பேசி அவரைத் தாக்கினராம். இதில் காயமடைந்த காா்த்திக், அவரது நண்பா் ரஞ்சித் ஆகியோா் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கிள்ளை போலீஸாா் சௌந்தரராஜன், ராஜா, முரளி, விஜய் ஆகியோா் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
Advertisement