த.மா.கா.வினா் முகக் கவசம் அளிப்பு
கடலூா் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞா் அணி சாா்பில் சிதம்பரத்தில் வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கடலூா் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞா் அணி சாா்பில் சிதம்பரத்தில் வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சிதம்பரம் தெற்கு சன்னதி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் எம்.என்.ராதா, மாவட்ட பொதுச் செயலா் கே.நாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், பாண்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிங்காரவேலு வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் நகர தமாகா தலைவா் தில்லை ஆா்.மக்கீன், நகர துணைத் தலைவா்
Advertisement
இளங்கோவன், நகர பொருளாளா் நடராஜ் பட்டாபிராமன், நகரச் செயலா் சம்பந்தமூா்த்தி, வட்டார இளைஞா் அணித் தலைவா் ராஜ்குமாா், நகர தமாகா இளைஞா் அணிச் செயலா் கே.மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் சாய் முரளிகிருஷ்ணா நன்றி தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து நகர தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் வாழைத்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கிருமிநாசினி வழங்கப்பட்டது. நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் தலைமை வகித்து பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மீனா செல்வம், ஜனகம், ருக்குமணி, மாவட்ட இளைஞரணிச் செயலா் ராதா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தமாகா மாவட்ட தொண்டரணி தலைவா் குமாா் தலைமையில் 5-ஆவது வாா்டில் தில்லையம்மன்கோயில் அருகே பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கிருமி நாசினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணிச் செயலா் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.