கடலூர்

லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது

DIN

பண்ருட்டி அருகே லாரியில் ஆற்று மணலை கடத்தியதாக அதன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொரத்தி கிராமம், தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளரும், ஓட்டுநருமான வேலங்காடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை (23) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT