முகப்பு
கடலூர்

கல்லூரி மாணவா் தற்கொலை

கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடலூா் வெளிச்செம்மண்டலம் சண்முகா நகரைச் சோ்ந்த ரா.ஜெயராமன் மகன் புருஷோத்தமன் (23). இவா், குமராபுத்தில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை ஜெயராமன் கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த புருஷோத்தமன் வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ஜெயராமன் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.