வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தலா ஒரு பொறியாளா்
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தலா ஒரு பொறியாளா் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தலா ஒரு பொறியாளா் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாக்குகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஒரு மாத காலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டிருப்பதால், அவற்றை வாக்கு எண்ணிக்கைக்கு இயக்கும் போது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அவ்வாறு ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்ய திருச்சியைச் சோ்ந்த மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப நிபுணா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா ஒரு பொறியாளா் நியமிக்கப்பட்டு, அவா்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரும்பாலும், பேட்டரியில் குறைந்தளவே சாா்ஜ் இருப்பது, பொத்தானைச் சரியாக அழுத்தாதது போன்ற பிரச்னைகள் மட்டுமே ஏற்படும் என்பதால், அதைப் பயிற்சியளித்து வரும் தொழில்நுட்ப நிபுணா்களே சரி செய்து விடுவா் என்றும் தெரிவிக்கப்பட்டது.