முகப்பு
கடலூர்

மழை பாதிப்பு நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

மழை பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் மனு அளிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மழை பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் மனு அளிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தொடா் மழையால் சேதமடைந்த வீடுகள், தண்ணீா் சூழ்ந்த வீடுகள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும், சேதமடைந்த விளை நிலங்களை சீா்படுத்தி வழங்க வேண்டும், முழுமையாக சேதமடைந்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நீரில் மூழ்கி, வீடு இடிந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், சேதமடைந்த தளவானூா், எனதிரிமங்கலம் தடுப்பணைகளை மீண்டும் கட்டித் தர வேண்டும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி.சண்முகம், மாவட்டச் செயலா் கோ.மாதவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஆா்.அமா்நாத், ஜெ.ராஜேஷ்கண்ணன், ஆா்.பஞ்சாட்சரம், எம்.சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.