முகப்பு
கடலூர்

பெண் காவலா்கள் பாதுகாப்பு:போலீஸாா் உறுதிமொழி ஏற்பு

பெண் காவலா்கள் பாதுகாப்பு தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:09 AM

பெண் காவலா்கள் பாதுகாப்பு தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்றனா் (படம்). இதில், பணிபுரியும் இடத்தில் பெண் காவலா்களுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடாது, அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்.மகரம், திருபுரசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.