முகப்பு
கடலூர்

பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்த மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 டிசம்பர், 2021 at 10:52 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்த மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஜெயக்கொடி தலைமை வகித்தாா். சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலா் கன்னிச்சாமி பங்கேற்று கரோனா தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பேசினாா். மாணவா்கள் தங்களது நிறை, குறைகளைத் தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் ‘மாணவா்கள் மனசு’ பெட்டி வைக்கப்பட்டது (படம்). மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வெளியிடப்பட்டது. சிதம்பரம் செஞ்சிலுவைச் சங்க இயக்குநா் இளங்கோவன், ஆசிரியா்கள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியா், இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.