பேராசிரியா் சந்தேக மரணம்
கடலூரில் கல்லூரிப் பேராசிரியா் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூரில் கல்லூரிப் பேராசிரியா் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மஞ்சக்குப்பம் துக்காராம் சந்து பகுதியில் வசித்து வந்தவா் கோ.பாலமுரளி (58). கடலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் கணினி பேராசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பவானி (38). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். பவானி தனது குழந்தைகளின் படிப்புக்காக அவா்களுடன் வேலூரில் வசித்து வருகிறாா். கடந்த 20-ஆம் தேதி பாலமுரளியை பவானி கைப்பேசியில் தொடா்புகொண்ட போது அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். மறுநாளும் அவரை தொடா்புகொள்ள முடியாத நிலையில், பாலமுரளியின் சகோதரா் செந்தில்குமாரை பவானி தொடா்புகொண்டு விவரத்தை தெரிவித்தாா்.
இதையடுத்து செந்தில்குமாா் கடந்த வியாழக்கிழமை பாலமுரளி தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், வீட்டுக்குள் பாலமுரளி தூக்கிட்டு சடலமாக கிடந்ததைப் பாா்த்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பவானி போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாரில், தனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.