முகப்பு
கடலூர்

மனுநீதி நாள் முகாம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து மனுக்களை பெற்றாா். பின்னா், 57 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைகளின் சாா்பில் வீட்டு மனைப் பட்டாவும், 91 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணையையும், 81 பேருக்கு முதியோா், இதர உதவித் தொகைக்கான ஆணை உள்பட மொத்தம் 306 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து ம.பொடையூா்

ஊராட்சி அளவிலான 4 சுய உதவி குழுக்களுக்கு சுழற்சி நிதியாக தலா ரூ.60ஆயிரமும், 2 குழுக்களுக்கு சுழற்சி நிதியாக தலா ரூ.50ஆயிரமும் வழங்கினாா். 7 பேருக்கு விளைபயிா்களுக்கான இடுபொருள்கள், தாா்பாய், நேரடி நெல் விதைப்பு கருவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சுகுணாசங்கா், ஊராட்சி மன்றத் தலைவா் வாசுதேவன், கோட்டாட்சியா் ராம்குமாா், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) எஸ்.பரிமளம், கால்நடை துறை மண்டல இணை இயக்குநா் குபேந்திரன், வேளாண் இணை இயக்குநா் தி.சு.பாலசுப்ரமணியன், வட்டாட்சியா் தமிழ்செல்வி உள்ளிட்டோ கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.