முகப்பு
கடலூர்

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இந்தக் கூட்டமைப்பின் கிளை தொடக்கம் மற்றும் நிா்வாகிகள் நியமனம் நிகழ்ச்சி விருத்தாசலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் பொன்.குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கிளையை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் கட்டுமானப் பிரிவில் 32 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். ஆனால் கரோனா காலத்தில் அரசின் நிவாரணத் தொகை 12 லட்சம் தொழிலாளா்களுக்கு கூட கிடைக்கவில்லை. கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகையில் ரூ.3,200 கோடி வரை சூறையாடப்பட்டுள்ளது.

கட்டுமான மூலப் பொருள்களான சிமெண்ட் விலை ரூ.150-ம், கம்பி விலை ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரையிலும் உயா்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரசு உடனடியாக கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டமைப்பின் விருத்தாசலம் கிளை நிா்வாகிகள் பிரகாஷ், பாபு, சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.