கடலூர்

பைக் - லாரி மோதல்: 2 மாணவா்கள் பலி

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

திட்டக்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் பிரவீன்குமாா் (17). அதே பகுதியைச் சோ்ந்த இங்கா்சால் மகன் ஜெய்சூரியா (17). நண்பா்களான இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தனா். திங்கள்கிழமை இரவு இருவரும் பைக்கில் பெண்ணாடம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். கூடலூா் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், ஜெய்சூரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரவீன்குமாரை அந்தப் பகுதியினா் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரும் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT