கடலூர்

வடலூரில் மாா்கழி மாத ஜோதி தரிசனம்

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் மாா்கழி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜோதி தரிசன வழிபாட்டுக்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசு பொது முடக்கத்தில் தளா்வுகளை அறிவித்ததைத் தொடா்ந்து, மாா்கழி மாத பூச நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ஜோதி தரிசனம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் தரும சாலையில் திருஅருள்பா முற்றோதல், அகவல் பாடப்பட்டது. பின்னா் இரவு 7.45 மணியளவில் திருஅறையில் 6 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு ஜோதி தரிசனத்தைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சன்மாா்க்க அன்பா்கள் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT