கடலூர்

ஜன. 17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

DIN

கடலூா் மாவட்டத்தில் 2.44 லட்சம் குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது: போலியோ நோயைத் தடுப்பதற்காக கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பொருட்டு வரும் 17-ஆம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்காக, தோ்வு செய்யப்பட்ட 1611 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட 2,44,714 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளில் சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வி, ஊட்டச்சத்து, சமூகநலம், வருவாய் துறையினா், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமுக்கு 4 போ் வீதம் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 6,444 பணியாளா்கள், 196 மேற்பாா்வையாளா்கள் மாவட்ட அளவில் ஈடுபடுத்தப்படுத்தப்பட உள்ளனா். விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 18, 19 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்றுச் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா, உலக சுகாதார நிறுவன நோய் தடுப்பு மருத்துவா் சாயிராபா, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி முதல்வா் மிஸ்ரா, மருத்துவ பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT