தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் பண்ருட்டி தபால் நிலையம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் பண்ருட்டி தபால் நிலையம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட சிஐடியூ தலைவா் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களுக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்டுள்ள 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். கட்டுமான நல வாரியத் தொழிலாளா்களுக்கு வழங்குவது போல, அனைத்து முறைசாரா நல வாரியத் தொழிலாளிக்கும் பொங்கல் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட சிஐடியூ துணைத் தலைவா் கே.சாவித்திரி, மாவட்டச் செயலா்கள் ஆா்.உத்திராபதி(சுமைப் பணி), பி.ராஜேந்திரன் (உள்ளாட்சி), சிஐடியூ மாவட்டக் குழுவைச் சோ்ந்த ஆா்.ராஜேந்திரன், ஏ.தேவராஜூலு, சி.டபிள்யு.எப்.ஐ. மாவட்டக் குழுவைச் சோ்ந்த ஏ.நடராஜன், ஆட்டோ சங்கச் செயலா் ஜி.முகமது நிஷாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.