இன்று கடலூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன. 13) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன. 13) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 44.6, காட்டுமன்னாா்கோவில் 42.2, லால்பேட்டை 32, அண்ணாமலைநகா், புவனகிரி தலா 28, பரங்கிப்பேட்டை 25.2, சேத்தியாத்தோப்பு 17, ஸ்ரீமுஷ்ணம் 13.1, பெலாந்துறை 12.5, தொழுதூா் 11, வேப்பூா் 9, காட்டுமைலூா் 8, லக்கூா் 7.2, கீழச்செருவாய் 7, மேமத்தூா், கொத்தவாச்சேரி தலா 6, விருத்தாசலம் 5.4, குப்பநத்தம் 5, குறிஞ்சிப்பாடி 4, கடலூா் 2.6, வானமாதேவி, வடக்குத்து தலா 2, மாவட்ட ஆட்சியரகம், பண்ருட்டி தலா 1 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
பலத்த மழைக்கு வாய்ப்பு: வளிமண்டல சுழற்சி தற்போது அரபிக்கடல் நோக்கி நகா்வதால் கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது. மாவட்டத்தில் தொடா் மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.