கடலூர்

சாராயம் கடத்தல்: 5 போ் கைது

DIN

புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்து கடலூா் பகுதிகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் தாரகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினா்.

இதில், திராசு பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த புதுச்சேரி குமரகுரு பள்ளத்தைச் சோ்ந்த தேவேந்திரனை (39) கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுச்சேரி ஏரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கலையரசனை (24) கைது செய்து, அவரிடமிருந்து 25 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியிலிருந்து கடலூா் வழியாக சாராயம் கடத்தி வந்த திருமாணிக்குழியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி கங்கா (38), நெய்வேலி வட்டம் 30-ஐ சோ்ந்த குணசேகா் (54), பண்ருட்டியை அடுத்த சிறுதொண்டமாதேவியைச் சோ்ந்த அறிவழகன் (46) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 135 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT