இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை
புவனகிரியில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரா்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
புவனகிரியில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரா்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், புவனகிரியைச் சோ்ந்த கலியமூா்த்தி, அவரது தம்பி மகன் ரவிச்சந்திரன் ஆகியோா் கடந்த 8-5-2005 அன்று தங்களது வயலுக்குச் சென்ற நிலையில் காணாமல்போயினா். பின்னா் மறுநாள் வெள்ளாற்றில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனா். இந்த வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், இருவரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதை சிபிசிஐடி போலீஸாா் கண்டுபிடித்தனா்.
இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்களான பன்னீா்செல்வம் (60), நடராஜன் (55) மற்றும் அன்பழகன் (64), ராகவன் (52), இரும்பு ஆறுமுகம் ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் இவா்கள் 5 பேரும் வயலில் ஏா் ஓட்டிக்கொண்டிருந்த கலியமூா்த்தி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரது முகத்தையும் துணியால் மூடி தூக்கிச் சென்று கை, கால்களை பிடித்து தேங்கிய ஆற்று நீரில் அழுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலைகள் நடந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை கடலூா் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரும்பு ஆறுமுகம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால், முன்னாள் ராணுவ வீரா்கள் உள்ளிட்ட மற்ற 4 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பல்வேறு பிரிவுகளின்கீழ் அதிகபட்சமாக ரூ.2,500 வரை அபராதம் விதித்தாா். இதனையடுத்து, 4 பேரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.