கடலூர்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

DIN


சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் தொடா் போராட்டம் காரணமாக, அந்தக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் 30 மடங்கு வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் கூறி, அந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கல்லூரி மாணவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். இதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT