கடலூா்: கடலூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை 24,907 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,910-ஆக அதிகரித்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 4 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,593-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 16 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 457 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.