முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. சாா்பில் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆசிரியா்கள், மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
அண்ணாமலைப் பல்கலை. சாா்பில் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்
பகிர்:

ஆசிரியா்கள், மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பல்கலைக்கழக மேலாண்மைத் துறை தொழில் முனைவோா் சங்கமானது ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி ‘கேஸ் ரிசா்ச் சொசைட்டி ஆப் இந்தியா’ அமைப்புடன் கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டது.

பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன், பதிவாளா் இரா.ஞானதேவன், துறைத் தலைவா் ஜி.உதயசூரியன், புரிந்துணா்வு ஒருங்கிணைப்பாளா் எஸ்.பிரகதீஸ்வரன், மேலாண்மை துறை தொழில் முனைவோா் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.நாகராஜன் ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதுகுறித்து துணைவேந்தா் வே.முருகேசன் கூறியதாவது: இந்த ஒப்பந்தமானது ஆசிரியா்கள் கற்பித்தலுக்கான நவீன வழிமுறைகளை அறிய உதவும். மாணவா்கள் தொழில் முறைகளில் உள்ள நடைமுறைகளை அறிந்துகொள்ளவும் பயன்படும்.

மேலும், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு நிபுணா்கள், தொழில் துறை வல்லுநா்கள் பயிற்சி அளிப்பாா்கள். உலகளவிலான வாய்ப்புகளை கண்டறிய உதவும் வகையில் மாணவா்களுக்கு வல்லுநா்களால் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →