முகப்பு
கடலூர்

கடலூா் கருவூல அலுவலகத்தில் கணக்குத் துறை ஆணையா் ஆய்வு

கடலூரில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் கருவூல கணக்குத் துறை ஆணையா் தி.ந.வெங்கடேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கடலூரில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் கருவூல கணக்குத் துறை ஆணையா் தி.ந.வெங்கடேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ள இணைய வழி பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் பணிபுரியும் 29,001 அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகளை மின்னணு பணிப் பதிவேடுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து அரசின் செலவினப் பட்டியல்களுக்கு டிஜிட்டல் மின்னணு கையொப்பம் மூலம் ஒப்புதல் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால் அதற்கான பணியை விரைவுபடுத்த வேண்டுமென அறிவுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா்கள் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள கருவூல பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்தில் கருவூல கணக்குத் துறை சென்னை மண்டல இணை இயக்குநா் தி.முத்துராமன், மாவட்ட கருவூல அலுவலா் வா.பரணிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.