கிணற்றில் பிடிபட்ட 8 பாம்புகள்!
சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தில் கிணற்றிலிருந்து 8 பாம்புகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM
சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தில் கிணற்றிலிருந்து 8 பாம்புகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தாா் கிராமத்தில் 8 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. தண்ணீா் இல்லாத இந்தக் கிணற்றில் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனச் சரக அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசூயா உள்ளிட்டோா்
அங்கு வந்து கிணற்றிலிருந்து 8 பாம்புகளை உயிருடன் பிடித்தனா் (படம்). பின்னா் அவற்றை வேப்பூா் அருகே உள்ள வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
Advertisement